Monday, May 18, 2009

பிட்டு கூழான கதை !!!

நான் கான்பூரிலிருந்து வந்த பிறகு, நானும், கார்த்தி அண்ணனும், எங்கள் சென்னை இல்லத்தில், வெகு காலம் பாடு பட்டு, சென்ற வாரம் தான் சமைக்க ஆரம்பித்தோம்... அதற்க்குள், நேற்று முன் தினம், எனக்கு ராகி பிட்டு செய்து சாப்பிட வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. பாட்டியின் ஆலோசனை பெறலாமென்று பாண்டிக்கு தொலைபேசியில் அழைத்தால், பாட்டி கல்பனாவை, கார்த்தி அண்ணனின் (எனக்கும்) தங்கை, காண மருத்துவமனை சென்றுள்ளதாக தெரிவித்தார் எனது தந்தை. எனவே, யாருடைய ஆலோசனையுமின்றி, இத்தனை வருடங்களாக நான் பிட்டு சாப்பிட்ட அனுபவத்தையும், கடவுளையும் நம்பி, பிட்டு சமைக்க கீழ்கண்டவாறு முற்பட்டேன்.

முன்னமே வாங்கி வைத்த ராகி பிட்டு மாவை, ஒன்றரை வீசம் படி ஆளந்து தட்டில் கொட்டிக் கொண்டேன். (அப்படியே சாப்பிடுவதற்கல்ல... பொருங்கள்...)

பின், தண்ணீரை சிறுக சிறுக தெளித்தபடி, பிட்டு மாவினை பிசைந்தபடி, கட்டி கட்டாதவாறு உதிர்த்து விட்டேன்.

இனி, என்ன செய்தாலும், மாவு கட்டியாகத்தான் இருக்கும் என்ற நிலை வந்த பிறகு, தண்ணீர் ஊற்றுவதை நிருத்திக்கொண்டேன்.

பிறகு, குக்கரில் (cooker) அளவறிந்து நீரினை ஊற்றி, உதி்ர்த்து விட்ட பிட்டு மாவு உள்ள தட்டினை அந்த குக்கரினுள் வைத்து, மூடியில் வாஷரை பொருத்தி, குக்கரை மூடினேன்.

அடுப்பை தீ மூட்டி, ஆவி வர காத்திருந்தேன்.

ஆவி வந்தபின், வெயிட்டை போட்டு, மூன்று விசில் வந்த பிறகு, தீயை அனைத்து, குக்கரை இறக்கினேன்.

குக்கரை திறந்து பார்த்தால், உள்ளே ஆவி நீராகி, பிட்டு கூழாகியிருந்த காட்சியினைக் கண்டு மனமுடைந்து போனோம் நானும் என் அண்ணனும். இறுப்பினும், ஆசை ஆசையாக செய்த பிட்டாயிற்றே!!! தட்டு நிறைய சர்கரை கொட்டி, மெல்லவம் முடியாமல், மிழுங்கவும் முடியாமல் பிட்டினைத் (கூழினை) திண்று திர்த்தோம்.

மறுநாள், மறுபடியும் பிட்டு செய்யும் முயற்ச்சியில் இறங்கினேன். இந்த முரை பிட்டு மாவு உள்ள தட்டினை மூடிய பின் குக்கரினுள் வைத்தேன்... பூ பூவாக பிட்டு வந்தது... அதில் பாதி சர்கரை கலந்தும், மீதி வெல்லம் கலந்தும் சாப்பிட்டேன். கனவு நினைவானது... ஆனால், பாவம் அண்ணன்தான், கனவுலகத்திலேயே மிதந்து கொண்டுருந்தார்... இரவு 11.30 ஆயற்றே...

சும்மாவா சொன்னாங்க 'முயற்சி யுடையான், இகழ்ச்சி யடையான்' ன்னு...

என்ன தான் முயற்சி இருந்தாலம், என் பாட்டி செய்யும் பிட்டு மாதிரி வரலை.

பாட்டி பிட்டு பாட்டி பிட்டு தான்... அதில், கொஞ்சம் முயற்சியுடன், நிறைய அன்பும் அனுபவமும் இருக்க இல்லையா???...

Saturday, May 9, 2009

நான் செய்ய நினைக்கும் சில செயல்கள்!!! : In Bharathiyar's words

பாரத தேசம்
ராகம் - புன்னாகவராளி
பல்லவி
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.
சரணங்கள்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)
முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)
சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)
காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)
பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)
ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)
குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)
மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)

Friday, March 27, 2009

Flickr

This is a test post from flickr, a fancy photo sharing thing.
| Back to top |