தூங்காதே தம்பி
தூங்காதே - நீயும்
சோம்பேறி என்ற பெயர்
வாங்காதே! (தூங்)
நீ-தாங்கிய உடையும்
ஆயுதமும் - பல
சரித்திரக் கதை சொல்லும்
சிறைக்கதவும்,
சக்தியிருந்தால்
உன்னைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு
இடம் கொடுக்கும் (தூங்)
நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன்
தானுங்கெட்டார்ந சிலர்
அல்லும் பகலுத்
தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்ஷடமில்லையென்று
அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக்கொண்டார் - உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டைவிட்டார் (தூங்)
போர்ப் படைதனில் தூங்கியவன்
வெற்றியிழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன்
கல்வியிழந்தான்!
கடைதனில் தூங்கியவன்
முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன்
புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதரின்
தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம்
தூங்குதப்பா! (தூங்)
தமிழ் திரைப்படம் - நாடோடி மன்னன்(1958)
இயற்றியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
|Back to Top|