Sunday, March 9, 2008

என் தந்தை என்னைப்பார்த்து மிகவும் அதிகமாக பாடிய பாடல்

தூங்காதே தம்பி

தூங்காதே - நீயும்

சோம்பேறி என்ற பெயர்

வாங்காதே! (தூங்)


நீ-தாங்கிய உடையும்

ஆயுதமும் - பல

சரித்திரக் கதை சொல்லும்

சிறைக்கதவும்,

சக்தியிருந்தால்

உன்னைக்கண்டு சிரிக்கும்

சத்திரந்தான் உனக்கு

இடம் கொடுக்கும் (தூங்)


நல்ல பொழுதையெல்லாம்

தூங்கிக் கெடுத்தவர்கள்

நாட்டைக் கெடுத்ததுடன்

தானுங்கெட்டார்ந சிலர்

அல்லும் பகலுத்

தெருக்கல்லா யிருந்துவிட்டு

அதிர்ஷடமில்லையென்று

அலட்டிக் கொண்டார்

விழித்துக் கொண்டோரெல்லாம்

பிழைத்துக்கொண்டார் - உன்போல்

குறட்டை விட்டோரெல்லாம்

கோட்டைவிட்டார் (தூங்)


போர்ப் படைதனில் தூங்கியவன்

வெற்றியிழந்தான் - உயர்

பள்ளியில் தூங்கியவன்

கல்வியிழந்தான்!

கடைதனில் தூங்கியவன்

முதல் இழந்தான் - கொண்ட

கடமையில் தூங்கியவன்

புகழ் இழந்தான் - இன்னும்

பொறுப்புள்ள மனிதரின்

தூக்கத்தினால் - பல

பொன்னான வேலையெல்லாம்

தூங்குதப்பா! (தூங்)


தமிழ் திரைப்படம் - நாடோடி மன்னன்(1958)

இயற்றியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்



|Back to Top|

No comments:

| Back to top |